சென்னையில் ஜனவரி 1.ம் தேதி காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தம் - பெருநகர காவல்துறை 

0 5024

சென்னையில் 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் ஜனவரி 1ம் தேதி காலை 5 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர ஏனைய வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக தங்கள் பயணங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் என்றும் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments